இயக்குனர் இமயம் கரங்களால் கெளரவம் பெற்றார் சந்தியூர் சேயோன்



அகிலன் பவுண்டேசன் மற்றும்  கதிரவன் கலைக்கழகம் இணைந்து நடத்திய மூத்த , இளம் கலைஞர்கள் கௌரவிப்பு கடந்த 17.10.2018 புதன்கிழமை செங்கலடி சௌபாக்கியா விழா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இயக்குணர் இமயம் பாரதிராஜா அவர்களினால் கௌரவிக்கப்பட்டாார் சந்தியூர் கி.சேயோன்.
 இளம் கலைஞரான இவர் கவிதை, குறும்படம், நாடகம், சிறகதை, பாடகர், அறிவிப்பாளர்,
மேடைப் பேச்சாளர் என பன்முக ஆளுமை கொண்டவர்.

இவரது தந்தையும் ஓர் இலக்கியவாதி ஆவார் சந்தியூரான் என்று இலக்கிய உலகில் அறியப்பட்ட கலாபூசணம் க.கிருஷ்னபிள்ளை ஆவார்


இந்தியாவில் இருந்து வருகைதந்த இயக்குநர் இமயம் பத்மஷிறி பாரதிராஜா , நடிகர் பாக்கியராஜ் நடிகர் விதார்த், திரைப்பட தொகுப்பாளர் சுரேஷ் காமாட்சி , நடிகை நட்சத்திரா ஆகியோர் இந் நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் இந் நிகழ்வில் மட்டக்களப்பில் புகழ்பெற்ற  இருபது மூத்த கலைஞர்களும் ஐந்து இளம் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.