(லியோன்)
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை சிறப்பிக்கும்
நிகழ்வு மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் இல்லத்தில் நடைபெற்றது.
இதனையொட்டி மட்டக்களப்பு கல்லடி - கல்முனை பிரதான வீதி ஊடாக நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் இல்லம்
வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்
.உதயகுமார் , மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்
எஸ் .அருள்மொழி ,மாவட்ட லயன்ஸ் கழக உறுப்பினர்கள் , தரிசனம் இல்ல மாணவர்கள்
. ஆசிரியர்கள் , பெற்றோர்கள் ,பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர் ,
ஊர்வலத்தை தொடர்ந்து நொச்சிமுனை விழிப்புலனற்றோர் இல்லத்தில் மாணவர்களின் வெள்ளைப்பிரம்பு தின
விசேட நிகழ்வுகள் நடைபெற்றது