தரிசனம் விழிப்புலனற்ற மாணவர்களின் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு


(லியோன்)


சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை சிறப்பிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் இல்லத்தில்  நடைபெற்றது.



இதனையொட்டி மட்டக்களப்பு கல்லடி - கல்முனை பிரதான  வீதி ஊடாக நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் இல்லம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


இந்த ஊர்வலத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்  எஸ் .அருள்மொழி ,மாவட்ட லயன்ஸ் கழக உறுப்பினர்கள் , தரிசனம் இல்ல மாணவர்கள் . ஆசிரியர்கள் , பெற்றோர்கள் ,பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர் ,

ஊர்வலத்தை தொடர்ந்து  நொச்சிமுனை விழிப்புலனற்றோர்  இல்லத்தில் மாணவர்களின் வெள்ளைப்பிரம்பு தின விசேட நிகழ்வுகள் நடைபெற்றது