பட்டிருப்பு களுவாஞ்சிகுடி நன்னடத்தை அலுவலகதத்தின் சிறுவர் தினம்

சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு பட்டிருப்பு களுவாஞ்சிகுடி நன்னடத்தை அலுவலகதத்தின் ஏற்பாட்டில் பெரியகல்லாறு ஸ்பாக்ஸ்  இல்ல மண்டபத்தில் (01.10.2016)  பி.ப 02.30 மணியளவில் நன்னடத்தை அலுவலகதத்தின் பொறுப்பதிகாரி மா.வரதராஜன் தலைமையில் ஆரம்பமானது இன் நிகழ்விற்கு பிரமத அதிதியாக பேராசிரியர் சி.மௌனகுரு சிறப்புவிருந்தினராக வைத்தியர் ம.ருதேசன் ஆகியோரும்  மேலும் பலரும் சிறுவர் தின விழாவில் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வின் முதல் நிகழ்வான அதிதிகளை பாண்டு வாத்தியத்துடன் வரவேற்று அழைத்து வரப்படனர். பின்னர் மங்கல விளக்கேற்றல் இறைவணக்கத்தினை தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை ஸ்பாக்ஸ் இல்ல மாணவியர் ஆற்றுகைப்படுத்தினர் அதனை தொடர்ந்து தலைமையுரை நன்னடத்தை அலுவலகதத்தின் பொறுப்பதிகாரி மா.வரதராஜன் நிகழ்த்தினார். சிறப்பு அதிதிகளின் உரை வரிசையில் சிரேஸ்ர நன்னடத்தை உத்தியோகத்தர் சி.சிவகுமார் மற்றும்  உரையாற்றினார்.
அத்துடன் பல்வேறு பட்ட கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன்  உயர்தரத்தில் சாதனை படைத்து பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களுக்கு  நினைவுசின்னம் பொன்னாடை வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கவிடயம்.