நடமாடும் நூலகமும் புத்தக கண்காட்சியும் ,


(லியோன்)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  நடமாடும் நூலகம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையில் வாசிப்பு திறனை விருத்தி செய்யும் வகையில் புத்தக கண்காட்சியும் ,வாசிப்பு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன


மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன் கல்லடி திருச்செந்தூர் நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட நடமாடும் நூலக கண்காட்சியும் ,மாணவர்களுக்கான வாசிப்பு நிகழ்வுகளும் கல்லடி திருச்செந்தூர் பகுதியில் இன்று நடைபெற்றது ,

கல்லடி திருச்செந்தூர்  நூலக பொறுப்பாளர் திருமதி வாமதி  சதாகரன்  தலைமையில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  நடைபெற்ற நடமாடும் நூலகம் நிகழ்வில் மாநகர சபை நூலக குழு தலைவர் தவராஜா ,வாசகர் வட்ட தலைவி  திருமதி ஹரிதாஸ் , மாநகர சபை உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்