(லியோன்)
மட்டக்களப்பு
கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு ஆரையம்பதி
நொத்தாரிஸ் மூத்த தம்பி வித்தியாலயத்தில் 2018 ஆம்
ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்
சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்களும் விருதுகளும் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் த .மணிவண்ணன் தலைமையில்
நடைபெற்றது .
தரம்
ஐந்து வகுப்பாசிரியர் திருமதி ,ஜெ .யோகராஜா
ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 188 புள்ளிகளை பெற்ற மாணவி எஸ் .பிருத்விக்கா , 172 புள்ளிகளை பெற்ற மாணவி எஸ் . தீபிகா ,188 புள்ளிகளை பெற்ற மாணவன் ஜெ. விராடன் ,
ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர் .
இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ,பாடசாலை பழைய மாணவர்கள்
கலந்துகொண்டனர் .