ஆரையம்பதி நொத்தாரிஸ் மூத்த தம்பி வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு ஆரையம்பதி நொத்தாரிஸ் மூத்த தம்பி  வித்தியாலயத்தில் 2018  ஆம் ஆண்டு தரம் ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்களும் விருதுகளும்  வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் த .மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது .


தரம் ஐந்து வகுப்பாசிரியர் திருமதி ,ஜெ .யோகராஜா  ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 188  புள்ளிகளை பெற்ற மாணவி எஸ் .பிருத்விக்கா , 172 புள்ளிகளை பெற்ற மாணவி  எஸ் . தீபிகா ,188 புள்ளிகளை பெற்ற மாணவன் ஜெ. விராடன் , ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர் .

இந்நிகழ்வில்   பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ,பாடசாலை பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர் .