தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் -ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள முற்போக்கு தமிழர் அமைப்பு

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின் விடுதலைசெய்யுமாறு கோரி நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

நாளை முற்பகல் 10.00மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் காந்திபூங்கா முன்பாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலிறுத்தி அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவரும் நிலையில் அதற்கு ஆதரவாக வடகிழக்கு கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளிலும் விடுதலையினை வலியுறுத்திப ல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின் விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு பேராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.