“தைரியமாக முன்னோக்கி செல்வதற்காக எமது சிறுவர்களைப் பலப்படுத்துவோம்” மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

“தைரியமாக முன்னோக்கி செல்வதற்காக எமது சிறுவர்களைப் பலப்படுத்துவோம்” எனும்  தொனிப்பொருளில் மண்முனைப்பற்று பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்திப் பிரிவு மற்றும் சமுர்த்தி பிரிவு ஆகியன  இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.


மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக திருமதி வை.லோகேஸ்வரராஜா அவர்கள் கலந்துகொண்டதுடன், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது சிறுவர் கழகங்கள் , முன்பள்ளி  சிறார்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களினால் கண்கவர் நடன நிகழ்வுகள் , பாடல்களுக்கான அபிநயம் மற்றும் விழப்புணர்வு நாடகம் என்பன இதன்போது அரங்கேற்றப்பட்டன.

இறுதியில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட சித்திரம் மற்றும் ஏனைய போட்டிகளில் முதலிடங்களை பெற்றுக்கொண்ட சிறார்களுக்கான பரிசில்களும் சான்றிதள்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டதுடன், கலை கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றிய அனைவருக்குமான நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், வறியா மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கிவைப்பப்பமையும் குறிப்பிடத்தக்கது.