புதூர் விக்ணேஸ்வரா வித்தியாலயத்திற்கு மடிக்கணனிகள் வழங்கி வைப்பு…



இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/புதூர் விக்ணேஸ்வரா வித்தியாலயத்திற்கு மடிக்கணனிகள் வழங்கி வைப்பு…

மட்டக்களப்பு இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/புதூர் விக்ணேஸ்வர வித்தியாலயத்திற்கு மடிக்கணனிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மட் /புதூர் விக்ணேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இணைந்த கரங்கள் அமைப்பின் தலைவர் கே.ஜெயந்திரன் அவர்களினால் மேற்படி மடிக்கணனிகள் பாடசாலை அதிபர் கே.பாஸ்கரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு புதூர், சேற்றுக்குடா, வீச்சுக்கல்முனை, திமிலைதீவு பிரதேசங்களின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் அக்கறையுடன் செயற்படும் மேற்படி அமைப்பானது இப் பாடசாலையின் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் பற்பல ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையிலேயே பாடசாலை மாணவர்களின் கணனி அறிவை மேம்படுத்தும் முகமாக இம் மடிக்கணனிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வுக்கான பதக்கங்களும் இவ் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.