.(லியோன்)
மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அமிர்தகழி கிளையின் பொதுக்கூட்டமும் , கிளை அங்கத்தவர் தெரிவும் சங்கத்தின் தலைவர் தம்பிராஜா ராஜேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக இறைவணக்கத்துடன் கிளைக்குழுத் தலைவரின்
வரவேற்புரையுடன் கூட்டம் ஆரம்பமானது
இதனை தொடர்ந்து திணைக்கள உத்தியோகத்தரால் கூட்டத்தின் நோக்கம்
பற்றியும் , கிளைக்குழு தெரிவு முறை பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது
இதை தொடர்ந்து கிளைக்குழு உறுப்பினர்களாக ஒன்பது பேரை தெரிவு செய்யும்
நிகழ்வு இடம்பெற்றது ,இதன்போது மகளிர்
உறுப்பினர்கள் இருவரையும் , 18 -35
வயதுகுட்பட்டவர்களுக்குள்
இருவரையும் மற்றும் ஏனைய ஐந்து
உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான
முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன
இதன்போது மகளிர் உறுப்பினர்கள் இருவரும் ,18 -35 வயதுகுற்பட்டவரில்
ஒருவரும் ஏனைய உறுப்பினர்கள் ஐவருமாக
அங்கத்தவர்களின் முன்மொழிவுகளுடன் ஏகமனதாக
எட்டு பேர் தெரிவு செய்யப்பட்டன
இதனைதொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைக்குழு உறுப்பினர்கள் பிரகடன
படுத்தப்பட்டதுடன் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அமிர்தகழி கிளைக்கான கிளை
அங்கத்தவர் தெரிவுடன் பொதுக்கூட்டமும்
நிறைவு பெற்றது .
இன்று நடைபெற்ற பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அமிர்தகழி
கிளைக்கான கிளை அங்கத்தவர் தெரிவு பொதுக்கூட்ட நிகழ்வில் கூட்டுறவு திணைக்கள
அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வை எ . ரஞ்சன் ,
திருமதி எ . நிசாந்த குமார் , அமிர்தகழி பல நோக்குக் கூட்டுறவுச்
கிளையின் பணியாளர் திருமதி செல்வஜோதி சிவராஜா
மற்றும் அமிர்தகழி
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்