அமிர்தகழி கூட்டுறவு கிளையின் பொதுக்கூட்டமும் , அங்கத்தவர் தெரிவும்


  .(லியோன்)


மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அமிர்தகழி கிளையின் பொதுக்கூட்டமும் , கிளை அங்கத்தவர் தெரிவும்  சங்கத்தின் தலைவர் தம்பிராஜா ராஜேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக இறைவணக்கத்துடன் கிளைக்குழுத் தலைவரின் வரவேற்புரையுடன் கூட்டம் ஆரம்பமானது


இதனை தொடர்ந்து திணைக்கள உத்தியோகத்தரால் கூட்டத்தின் நோக்கம் பற்றியும் , கிளைக்குழு தெரிவு முறை பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது
இதை தொடர்ந்து கிளைக்குழு உறுப்பினர்களாக ஒன்பது பேரை தெரிவு செய்யும் நிகழ்வு  இடம்பெற்றது ,இதன்போது மகளிர் உறுப்பினர்கள் இருவரையும் , 18 -35   வயதுகுட்பட்டவர்களுக்குள்  இருவரையும்  மற்றும் ஏனைய ஐந்து உறுப்பினர்களை  தெரிவு செய்வதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன

இதன்போது மகளிர் உறுப்பினர்கள் இருவரும்  ,18 -35 வயதுகுற்பட்டவரில் ஒருவரும்  ஏனைய உறுப்பினர்கள் ஐவருமாக அங்கத்தவர்களின் முன்மொழிவுகளுடன்  ஏகமனதாக எட்டு பேர் தெரிவு செய்யப்பட்டன
இதனைதொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைக்குழு உறுப்பினர்கள் பிரகடன படுத்தப்பட்டதுடன் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அமிர்தகழி கிளைக்கான கிளை அங்கத்தவர் தெரிவுடன்  பொதுக்கூட்டமும் நிறைவு பெற்றது .

இன்று நடைபெற்ற பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அமிர்தகழி கிளைக்கான கிளை அங்கத்தவர் தெரிவு பொதுக்கூட்ட நிகழ்வில் கூட்டுறவு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வை எ . ரஞ்சன் ,  திருமதி எ . நிசாந்த குமார் ,   அமிர்தகழி பல நோக்குக் கூட்டுறவுச் கிளையின் பணியாளர் திருமதி செல்வஜோதி சிவராஜா  மற்றும்  அமிர்தகழி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை  அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்