சகாயபுரம் சதா சகாய அன்னை ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது


  (லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மாமாங்கம் சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா  கடந்த 21 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை மாலை பங்கு தந்தை அருட்பணி திருச்செல்வம்  அடிகளார்   தலைமையில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று இடம்பெற்ற திருவிழா திருப்பலியுடன் ஆலய திருவிழா நிறைவு பெற்றது 


திருவிழா திருப்பலியினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை  தலைமையில் பங்கு தந்தை அருட்பணி  திருச்செல்வம்  அடிகளார் , தொமஸ்கன் சபை அதிபர் அருட்பணி  ஜோர்ஜ் மைக்கல் அடிகளார் , வொலன்டாரிஸ் டேயுஸ் சபையின் இலங்கைக்கான பொறுப்பாளர் அருட்தந்தை யூஸ்ரஸ் அடிகளார் இணைந்து ஒப்புகொடுத்தனர் .    

இன்று நடைபெற்ற திருவிழா திருப்பலியில் பங்கு மாணவர்களுக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்  கலாநிதி பொன்னையா ஜோசப்   ஆண்டகையினால் புதுநன்மை ,உறுதிப்பூசுதல்  ஆகிய அருள் அடையாளங்கள் வழங்கப்பட்டது .

திருநாள்  திருப்பலியை தொடர்ந்து  மறை கோட்ட மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் , மறை மாவட்ட ரீதியாக நடத்தப்பட்ட போட்டிகளில்  இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்  தொடர்ந்து  ஆலய முன்றலில் நடைபெற்ற அன்னையின் திருச்சுருப ஆசிர்வாத நிகழ்வுடன்  ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது .

திருவிழா திருப்பலியில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது