இருதயபுரம் எவர் கீரின் மைதான சுற்று வேலிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


 (லியோன்)


தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் உட்கட்டுமான அபிவிருத்தி அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்தின்  நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனை  வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு இருதயபுரம்  
எவர் கீரின் விளையாட்டு மைதானத்திற்கான சுற்றுவேலி அமைத்தளுக்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது


மட்டக்களப்பு இருதயபுரம் ஐந்தாம் வட்டாரம் உறுப்பினர் பூபாலராஜாவின்   வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் ஞா . ஸ்ரீநேசனின் விசேட பணிப்புரையின் கீழ்  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் உட்கட்டுமான அபிவிருத்தி அமைச்சின் இரண்டு மில்லியன்  ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த  மைதானத்திற்கான சுற்றுவேலி அமைப்பதற்கு   நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது

மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாராளுமணர் உறுப்பினர் ஞா ,ஸ்ரீநேசன் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ,மாநகர சபை உறுப்பினர்களான  மதன் , பூபாலராஜா ,  தவராஜா , கிராம சேவை உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , விளையாட்டு கழக உறுப்பினர்கள் , பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்