மாணவர்களுக்கான பாராளுமன்ற தேர்தல் மட்டக்களப்பில் நடைபெற்றது .


(லியோன்)


மட்டக்களப்பு
வின்சென்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலை மாணவர்களுக்கான மாணவ  பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்விவலயத்திகுற்பட்ட மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலை மாணவர்களுக்கான பாராளுமன்ற தேர்தல் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் எஸ் .சசீலன் மேற்பார்வையின் கீழ் பாடசாலை அதிபர் திருமதி .கே .சுபாகரன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது  

பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்படுகின்ற இந்த பாராளுமன்ற தேர்தல் முறைமையானது , மாணவர்களுக்கிடையில் ஜனநாயக ஒழுக்க விளும்பியங்களை ,மாணவர்களின் செயல் திறன்களை மேம்படுத்தும் கட்டி எழுப்பும் வகையிலும்  இந்த மாணவ பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படுகின்றது .

இதன் ஊடாக பிரதமர் , சபாநாயகர் , 10 அமைச்சர்கள் ,10 பிரதி அமைச்சர்கள் , குழு தலைவர்கள் , குழு பிரதி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் .

இன்று மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்ற மாணவ பாராளுமன்ற தேர்தல் நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்