குப்பைகளை அகற்றும் பணியில் பாடசாலை மாணவர்கள்


(லியோன்)

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  பணிப்புரைக்கு அமைவாக
தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக  செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் அக்டோபர் 02 ஆம் திகதி வரை  பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு  நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றன
.

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகள் மட்டத்தில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்

மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்  ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு  மாநகர எல்லைக்குட்பட்ட சத்துருகொண்டான் பிள்ளையாரடி பிரதான வீதியோரங்கள்  மற்றும் ஆற்றங்கரையோர பகுதியில் குப்பைகளை  அகற்றி துப்பரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன 


இந்த டெங்கு ஒழிப்பு துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் , மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயம் , மட்டக்களப்பு கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் ,, மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளின்  அதிபர்களின் தலைமையின் கீழ் 80 மாணவர்களுடன் ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் .பாலசுபிரமணியம் , பாடசாலைகளின் உடல்கல்வி ஆசிரியர்கள் ,மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பாதுகாப்பு குழு உறுப்பினர்  மற்றும் மாநகர சபை ஊழியர்கள் இணைந்து குப்பைகளை அகற்றி துப்பரவு செய்யும் பணி ஈடுபட்டனர்