மட்டக்களப்பு கிரான் சக்தி முன்பள்ளி மாணவர்களுக்கான பாதணிகள் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் வழங்கி வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளருமான க.கமலநேசனிடம் சக்தி முன்பள்ளி ஆசிரியர்கள் இங்கு கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு பாதணிகளை பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதன் பிரகாரம் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் புலம்பெயர்ந்து வாழும் பத்மநாதன் நடராஜிடம் வேண்டிக் கொண்டமைக்கமைய அவரது நிதிப்பங்களிப்பின் உதவியுடன் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பகீரதன், பிரதேச சபை உறுப்பினர்களின் இணைப்பாளர்களான க.பிரதீப், எஸ்.துசாந், எஸ்.தஜிவன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.