கொக்கட்டிச்சோலையில் 45ஆவது கதிரவன் சிறப்பு பட்டிமன்றம் 27/09/2018



(விளாவூர் நிருபர்)

கொக்கட்டிச்சோலை   அருள்மிகு  தான்தோன்றீஸ்வரர் ஆல ய வருடாந்த திருவிழாவில் மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றத்தின் 45 ஆவது சிறப்பு பட்டிமன்றம் படையாட்சி குடியாரின் ஏற்பாட்டில் அவர்களின் திருவிழாவில் நடைபெற்றது.

தமிழிர் பண்பாடு வாழ்கின்றது என்று ஒரு அணியும் இல்லை தமிழர் பண்பாடு வீழ்கின்றது என்று அணியும் விவாதித்த இப் பட்டிமன்றத்திற்கு கதிரவன் த.இன்பராசா (ச.நீ) தலைமைவகிக்க சோலையூரான் ஆ.தனுஸ்கரன்,கவிஞர் ஜீ.எழில்வண்ணன்,புதுவையூர் பு.தியாகதாஸ்,கவிஞர் அழகு தனு,கவிஞர் அ.அன்பழகன்(ச.நீ) ,பாலமீன்மடு இரா கலைவேந்தன் ஆகியோர் பேச்சாளர்களாக பங்குபற்றினர்.

நிகழ்வின் இறுதியில் பட்டிமன்ற பேச்சாளர்கள் நினைவுச்சின்ம் வழங்கி  கௌரவிக்கப்பெற்றனர்.