(லியோன்)
இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரம்ம குமாரிகள் நிலையத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டு தேசிய ரீதியாக நடாத்தப்படும் பிரம்ம குமாரிகள் இராஜயோக யுவதிகளிக்கான (குமாரிகளுக்கான ) இரண்டு நாள் ஒன்றுகூடல் நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது
இந்த ஒன்றுகூடல்
நிகழ்வானது இராஜயோக நிலையத்தின் ஆழமான
அனுபவத்தையும் , ஆன்மீக ஞானத்தின் ஆழமான புரிந்துணர்வையும் , இன்றைய சவால்களுக்கு
முகம்கொடுக்ககூடிய மனோவலிமை, உடல் உள வலிமை ,சுயநம்பிக்கை ,தைரியம் ,பயமின்மை
,தலைமைத்துவ பண்பு ஆகியற்றினை யுவதிகள் வளர்த்துக்கொள்வதின் ஊடாக ஒரு மேன்மையான
வாழ்க்கையை அனுபவம் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் வருடாந்தம் தேசிய பிரம்ம
குமாரிகள் இராஜயோக யுவதிகளிக்கான (குமாரிகளுக்கான )ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறுகின்றது
மட்டக்களப்பு மாவட்ட பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலைய
பொறுப்பாளர் சகோதரர் கே சுரேந்திரன்
தலைமையில் நடைபெற்ற தேசிய பிரம்ம குமாரிகள் இராஜயோக
யுவதிகளிக்கான (குமாரிகளுக்கான )ஒன்றுகூடல்
நிகழ்வில்
இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைகழக மின்னியல் மற்றும்
மின்னியந்திரவியல் துறை சார்ந்த பொறியியல் பட்டதாரி ஆன்மீக ஆசிரியர் ஆன்மீக சகோதரி
பி கு .ஜெயலட்சுமி மற்றும் இலங்கை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரம்ம குமாரிகள்
நிலைய யுவதிகள் கலந்துகொண்டார்