மட்டக்களப்பு மாநகரசபையின் 03வது பௌர்ணமி கலை விழா…




மட்டக்களப்பு மாநகரசபையின் 03வது பௌர்ணமி கலை விழா…

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மாநகர சபையும் இணைந்து நடாத்திவரும் மட்டக்களப்பின் பாரம்பரிய கலை கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் ஆற்றுகைக் கலை நிகழ்வான பௌர்ணமி கலை நிகழ்வானது நேற்று திங்கட்கிழமை மாநகரசபை உறுப்பினரும், கலை கலாச்சாரக் குழுவின் தலைவருமான வே.தவராஜா தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பில் மருவி வரும் பாரம்பரியக் கலைநிகழ்வுகள் மற்றும் நாடகங்கள், கதை நிகழ்வுகள், பல்வேறு கலாச்சாரக் கட்டமைப்புகளைக் கொண்ட நிகழ்வுகள் எனப் பல்வேறு அம்சங்களிலான நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் 03வது பௌர்ணமி கலை நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.