விபத்தில் 33,000 மெகா வோல்ட் இணைப்புசெல்லும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


(லியோன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் ஊறணி பகுதியில்   இடம்பெற்ற வாகன விபத்தில் 33,000 மெகா வோல்ட் வலு கொண்ட மின்சார இணைப்பு செல்லும் பிரதான மின்கம்பங்கள் மூன்று சேதமைடைந்துள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்


மட்டக்களப்பு நகரில் இருந்து வாழைச்சேனையை நோக்கி பயணித்த கார் வேககட்டுப்பாட்டை இழந்த நிலையில் மிகம்பத்தில் மோதியதன் காரணமாக ஏற்பட்ட அதிர்வுளின் மூன்று பிரதான கம்பங்கள் உடைந்து விழுந்துள்ளதாக  தெரிவித்தனர்

இடம்பெற்ற விபத்தில் வாகனத்தை செலுத்திய நபருக்கு எதுவித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்