அரச விடுதி கிணறுகளுக்கான வலைமூடி வழங்கும் ஆரம்ப நிகழ்வு


 (லியோன்)

அம்கோர்தன்னார்வத் தொண்டு நிறுவனமானது மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்துடன் இணைந்து செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் அக்டோபர் 02 ஆம் திகதி வரை  தேசிய டெங்கு ஒழிப்பு  வாரத்தை முன்னிட்டு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தினை ஆரம்பித்துள்ளது



இதற்கு அமைய ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி பிள்ளையார் கோயில் வீதி அரச விடுதி கிணறுகளுக்கான  வலைமூடி வழங்கும் ஆரம்ப  நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில்   இடம்பெற்றது .


இதன்  ஆரம்ப நிகழ்வில்  மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ் வரன் , அம்கோர் நிறுவன பிரதம   பணிப்பாளர்  ப முரளிதரன் , அம்கோர் நிறுவன நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் .யோ . சிவயோகராஜன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்