(லியோன்)
விளையாட்டு அமைச்சின்
93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு வெபர் மைதான வளாகத்தில்
நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கு மட்டக்களப்பு மாநகர சபைக்கு
கையளிக்கப்பட்டு (6) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது
.
திறந்து வைக்கப்பட்ட
உள்ளக விளையாட்டு அரங்கில் வைபவ ரீதியாக
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு வலயக்கல்வி
அலுவலகம் ,மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கமும் இணைந்து நடாத்தும் பூப்பந்தாட்ட
பயிற்சி முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் மாநகர
முதல்வர் தியாகராஜா சரவணபவன் , பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் , மாநகர பிரதி
ஆணையாளர் என் .தனஞ்சயன் ,மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ,
வலயக்கல்வி அலுவலக உடல்கல்வி ஆசிரியர் ஆலோசகர் கே .ரவீந்திரன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
நிறைவேற்றுப்பணிப்பாளர் சசிநந்தன், மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் , மாநகர
சபை உறுப்பினர்கள் , ஊழியர்கள் ,பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்