மண்முனைப்பற்று பாலமுனையில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் வார நிகழ்வு

(கல்லடி  நிருபர்)

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் வார நிகழ்வுகள் தொடர்ச்சியாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் வாரத்தினை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை கடற்கரையில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் கோகுலதீபன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

தூய்மையான கடற்கரையினை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவது இன்றைய தலைமைமுறையினரின் முக்கியமான கடமை என்ற காரணத்தினால் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தெரிவித்தார்.