சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்களுக்கான ஐந்து நாள் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு


 (லியோன்)

.மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில்   எஸ் 4 ஐ ஜி  அனுசரணையில் அவுஸ்ரேலியா  அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  திறன் அபிவிருத்தி  நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி  உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்காக  ஐந்து நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதன் இறுதி நாள் நிகழ்வு   மட்டக்களப்பில் நடைபெற்றது
.

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி  உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு  வழங்கப்பட்ட  பயிற்சிகளின்  பின்னர் தங்களது விடுதியில் கடமை புரியும் ஊழியர்களுக்கு சுற்றுலாத்துறையின்  வேலைத்தளம், சூழலை சுகாதாரம் மிக்க பாதுபாப்பானதா பராமரித்தல்

விடுதிகள்  குறித்து நாள்ளதொரு அபிப்பிராயத்தை வாடிக்கையாளர் மனதில் ஏற்படுத்தல் ,விருந்தோம்பற்குழுவின் அங்கத்தவராக விளைதிறனுடன் பணியாற்றல்

உணவு சம்பந்தப்பட்ட விடயங்களுடன் பணியாற்றுவதாயின் பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதிப்படுத்தல்  போன்ற விடயங்கள் பயிற்சிகளாக   வழங்கப்பட்டு திறன் அபிவிருத்தியினை மதிப்பீடு செய்து அவர்களுக்கான  சான்றிதழ்கள்  வழங்கப்படவுள்ளன
மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி கே. குகதாஸ்    தலைமையில் நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வில் திறன் அபிவிருத்தி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் திருமதி . மரினா உமேஷ் ,,மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன உறுப்பினர்களான என் .நிரோசன் , வி .மனோகரன் , மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் உத்தியோகத்தர்கள் ,சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்