விளாவட்டவானில் அரங்கேற்றம் செய்யப்பட்டது கவின் கலைக் கழகத்தின் "சாரங்கதரன்" தென்மோடி கூத்து




(விளாவூர் நிருபர்)

கலையோடு உறவாடும் ஊர்களிலே மட்டக்களப்பு - விளாவட்டவான் கிராமமும் ஒன்று இங்கு பல  கலைகள் இருக்கின்றது.
அந்த கலைகளில் முதன்மை பெறுகின்றது கூத்துக்கலை

விளாவட்டவான் கவின் கலைக்கழகம் ஒவ்வொரு வருடமும் புதிய கூத்துக்களை பழகி அரங்கேற்றி வருகின்றது

அந்த வகையில் இவ்வருடம் விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ  வீரமாகாளியம்மன் ஆலய திருச்சடங்கு உற்சவத்தின் மூன்றாம் நாள் இரவினை சிறப்பிக்கும்  வண்ணம் கவின் கலைக் கழகத்தின் புதிய படைப்பான "சாரங்கதரன்" தென்மோடி கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது.