மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் காரியாலயங்களுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு




கிழக்கு சமூக அபிவிருத்தி மைய நிறுவகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் காரியாலயங்களின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சமூக பொலிஸ் ஒருங்கிணைப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.சந்திரபால அவர்கள் கலந்துகொண்டதுடன், நிறுவனத்தி சார்பில் நிறைவேற்றுப் பணிப்பாளர்  ஜனாப் புகாரி , மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஜமால்டின், சமந்திலகரத்ன, திட்ட முகாமையாளர் செல்வி பே.ரேணுகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒன்பது காரியாலயங்களுக்கு இத் தளபாடங்கள் வழங்கப்பட்டதுடன், குறித்த காரியாலயங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் பொருட்களை பெற்றுக்கொள்வதை படங்களில் காணலாம்.