சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

 (லியோன்)

சர்வதேச இளைஞர் தினத்தை சிறப்பிக்கும் வகையில்  மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் ஏற்பாட்டில் 306 c2 கீழ் உள்ள மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம் .ஜெ .எம் எப்  மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் முழுமையான அனுசரணையில் மாபெரும் இரத்ததான முகம்  மட்டக்களப்பு  லயன்ஸ் கழக தலைவர் லயன் புஸ்பாகரன் நமச்சிவாயம்  தலைமையில் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் நிலவுகின்ற இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் மற்றும் 306 c2 கீழ் உள்ள மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம் .ஜெ .எம் எப் லயன்ஸ் கழகத்தின் முயற்சியின் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை  09.00 மணி முதல்  பிற்பகல் 01 .00  மணி வரை நடைபெறவுள்ள  இந்த இரத்ததான நிகழ்வில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர்  க.விவேக் ,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் திருமதி .கிருஷ்ணவேணி சுஜீந்திரன், மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான  பீட மாணவர்கள் , வைத்தியர்கள் , லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ,,பொலிஸ் உத்தியோகத்தர்கள் , வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்