முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் மத்தியில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்காக நாய்ச்சண்டை உருவாகியுள்ளதைப் பற்றி நாட்டுமக்கள் கவனம் செலுத்தத்தேவையில்லை.
எது எவ்வாறிருப்பினும் 2020 ஆம் ஆண்டில் இதே கூட்டுக்கட்சிகள்கொண்ட நல்லாட்சி அரசாங்கமே அமையுமென திடமாகக்கூறுவதாக வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விருட்சம் மாதிரிக் கிராமம் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாசாவினால் திங்கட்கிழமை (13) மக்களிடம் கையளிக்கப்;பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸா, பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,
அலி ஸாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், உதவி உள்ளுராட்சி ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதேச செயலாளர்களான உ.உதயசிறிதர், ந.வில்வரெட்னம், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விருட்சம் மாதிரிக் கிராமத்தில் 29 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம், அபிவிருத்தி செய்யப்பட்ட 29 காணிகளுக்கான அறுதி உறுதிப் பத்திரங்களும், பயனாளிகள் 192 பேருக்கும் வீடமைப்பு உதவிக் காசோலைகள், பயனாளிகள் 75 பேருக்;கு “சொந்துருபியச” எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபாய் வீடமைப்புக் கடன்;, பயனாளிகள் 200 பேருக்;கு “விசிரி” திட்டத்தின் கீழ் தலா ஒரு இலட்ச ரூபாய் இலகு கடனுக்கான காசோலை வழங்கப்பட்டன. இலவச கண் கண்ணாடிகள் வழங்கல் என்பனவும் நடைபெற்றன.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - இந்த நாட்டை சூரையாடிய முன்னாள் ஆட்சியாளர்கள் மீண்டும் வர முயற்சிக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என முட்டி மோதிக் கொள்கிறார்கள்.
இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு போதும் இவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு விரும்பவில்லை. வெளிநாட்டு நாணயங்களை எண்ணிய கைகளில் மீண்டும் டொலர், பவுண் யூரோ போன்ற வெளிநாட்டு நாணயங்களை மீண்டும் அவர்களின் கைகளில் எண்ணுவதற்காக அதி வேக நெடுங்சாலையில் சென்று ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்.
கடந்த காலத்தில் மத ஸ்தலங்களை இடித்து அதில் மகிழ்சி கண்டு இந்த நாட்டை சூரையாடியவர்கள் தற்போது பன்சாலைகள். கோவில்கள், பள்ளிவாசல்கள் தேவாலங்களுக்குச் யாத்திரை செல்கிறார்கள்.
விருட்சம் மாதிரிக் கிராமத்தில் 29 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம், அபிவிருத்தி செய்யப்பட்ட 29 காணிகளுக்கான அறுதி உறுதிப் பத்திரங்களும், பயனாளிகள் 192 பேருக்கும் வீடமைப்பு உதவிக் காசோலைகள், பயனாளிகள் 75 பேருக்;கு “சொந்துருபியச” எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபாய் வீடமைப்புக் கடன்;, பயனாளிகள் 200 பேருக்;கு “விசிரி” திட்டத்தின் கீழ் தலா ஒரு இலட்ச ரூபாய் இலகு கடனுக்கான காசோலை வழங்கப்பட்டன. இலவச கண் கண்ணாடிகள் வழங்கல் என்பனவும் நடைபெற்றன.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - இந்த நாட்டை சூரையாடிய முன்னாள் ஆட்சியாளர்கள் மீண்டும் வர முயற்சிக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என முட்டி மோதிக் கொள்கிறார்கள்.
இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு போதும் இவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு விரும்பவில்லை. வெளிநாட்டு நாணயங்களை எண்ணிய கைகளில் மீண்டும் டொலர், பவுண் யூரோ போன்ற வெளிநாட்டு நாணயங்களை மீண்டும் அவர்களின் கைகளில் எண்ணுவதற்காக அதி வேக நெடுங்சாலையில் சென்று ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்.
கடந்த காலத்தில் மத ஸ்தலங்களை இடித்து அதில் மகிழ்சி கண்டு இந்த நாட்டை சூரையாடியவர்கள் தற்போது பன்சாலைகள். கோவில்கள், பள்ளிவாசல்கள் தேவாலங்களுக்குச் யாத்திரை செல்கிறார்கள்.
எது எவ்வாறிருப்பினும் 2020 ஆம் ஆண்டில் இதே கூட்டுக்கட்சிகள்கொண்ட நல்லாட்சி அரசாங்கமே அமையும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 70 வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகினறன. இன்னும் 150 மாதிரிக் கிராமங்களை இந்த மாட்டத்தில் உருவாக்க உள்ளேன்.
அதேபோன்ற 2019ம் ஆண்டில் இன்னும் 200 மாதிரிக் கிராமங்களை இந்த மாவட்டத்திற்கு வழங்குவேன். என்றார்.