பழுகாமம் கேணிக்கரை பிள்ளையார் ஆலயத்தின் ஆடிஅமாவாசை அலங்கார உற்சவம்

(பகீ)
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ கேணிக்கரை பிள்ளையார் ஆலய ஆடிஅமாவாசை அலங்கார உற்சவமும் வருஷாபிஷேகமும் இன்று(05) ஆரம்பமாகியுள்ளது. 


இன்று பாற்குடப்பவனியும், சங்காபிஷேகத்துடனும்(108)  ஆரம்பமாகியது. மேலும் தொடர்ச்சியாக வேதபாராயனத் திருவிழா, திருவிளக்கு திருவிழா, சப்புறத்திருவிழா, மாம்பழத்திருவிழா, வேட்டைத்திருவிழா என்பனவும் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து 11.08.2018 ஆடிஅமாவாசை தீர்த்தத்துடன் நிறைவடைய உள்ளது.

ஆலய திருவிழா ஆலய பிரதம குருவும், உற்சவ கால பிரதம குருவுமாகிய ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ நாராயண சண்முக தாஸீஸ்வர குருக்களின் தலைமையில் இடம்பெறுகின்றது.