களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கியின் ஏற்பாட்டில் தரம் 05 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கருத்தரங்கு…

களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கியின் ஏற்பாட்டில் தரம் 05 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கருத்தரங்கு…

தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடி கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயன்முறைக் கருத்தரங்கு ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தயாழசீலன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச பல்வேறு பாடசாலைகளில் தரம் 05 மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். வளவாளர்களாக ஆசிரியர்களான எஸ்.கேதீஸ்வரன் மற்றும் எப்.ஜெனித்தன் ஆகியோரும் பங்குபற்றினர்.

தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடிக் கிளையின் முகாமையாளர் திருமதி த.கதிரேசப்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்றது. அத்துடன் மாணவர்களுக்கு வங்;கியின் ஏற்பாட்டில் மாதிரி வினாத்தாள்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.