(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ,மாநகர சபை முதல்வர்
, பிரதேச செயலாளர்கள் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,வலயக்கல்விப்
பணிப்பாளர்கள் .இளைஞர்கள் ,யுவதிகள் , பொலிஸ்
பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கிடையில் மாவட்ட பல்சமய
பேரவையின் செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றது .
மாவட்ட சர்வமத பேரவையின் ஒழுங்கமைப்பில் தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர் .மனோகரன்
தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க
அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோர்
கலந்துகொண்டனர்
இதன் போது மாவட்ட பல்சமய பேரவையின் செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க
தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட கடந்த கால செயல்பாடுகள் தொடர்பாக அரச அதிபர் ,மாநகர சபை முதல்வர் , பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி
மன்ற உறுப்பினர்கள் ,வலயக்கல்விப் பணிப்பாளர்கள் .இளைஞர்கள் ,யுவதிகள் , பொலிஸ் பொறுப்பதிகாரிகள்
விளக்கமளிக்கப்பட்டு இது தொடர்பான கருத்து கலந்துரையாடல் இடபெற்றது
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர்
தியாகராஜா சரவணபவன், சர்வமத தலைவர்கள் , , வாழைச்சேனை , ஏறாவூர் பிரதேச சபை
,மண்முனை தென் எருவில் பற்று ,கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் , இளைஞர்கள்
,யுவதிகள் , பொலிஸ் பொறுப்பதிகாரிகள் , மாவட்ட பல்சமய பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்