செல்வ சன்னிதி பாத யாத்திரை குழுவினர் மாமாங்கேஸ்வரர் ஆலய பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டனர்


(லியோன்)

கதிர்காமம் கந்தன் ஆலய உற்சவத்தை  முன்னிட்டு யாழ்  தொண்டமனாறு  செல்வ சன்னிதி ஆலயத்திலிருந்து  ஆரம்பித்த புனித திருத்தல பாத யாத்திரை  மட்டக்களப்பை வந்தடைந்தது


இலங்கை நாட்டில் சாந்தி ,சமாதனம் ,நல்லிணக்கம் ,இனங்களுக்கிடையே ஒற்றுமை வளர யாழ்  தொண்டமனாறு செல்வசன்னிதி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட  தலயாத்திரை குழுவினர்  நேற்று மாலை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தது .  

மட்டக்களப்பை வந்தடைந்த திருத்தல பாத யாத்திரை அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற  பூஜை வழிபாடுகளுடன் தலயாத்திரை கதிர்காமத்தை  நோக்கி  இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது . 

இந்த புனித திருத்தல பாத யாத்திரை கதிர்காமம் முருகன்  ஆலய உற்சவத்தில் கலந்து  சிறப்பிப்பதுடன் தமது திருத்தல பாத யாத்திரையினை நிறைவு செய்யவுள்ளனர் .