கல்லடி வேலூர் சன சமூக நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது


(லியோன்)

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்யும் அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனை  வடக்கு பிரதேச செயலக பிரிவு  கல்லடி வேலூர் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பத்திரகாளி அம்மன் சன சமூக நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட்டது


கல்லடி வேலூர் விபுலானந்தா இளைஞர் அணி விளையாட்டு கழக  தலைவர் எஸ் .சுபராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்ட முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் , பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான கணேசமூர்த்தி மற்றும் மாநகர முதல்வர் தியாகராஜா சரணவனபவன் ஆகியோர் இணைத்து சன சமூக நிலையத்தினை  திறந்து வைத்தார்கள்    

\இந்நிகழ்வில் கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய அதிபர்  எ .ராசு ,பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்  ஸ்ரீகுமார் , மாநகர சபை உறுப்பினர் சிவலிங்கம் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , மாதர் சங்க உறுப்பினர்கள் ,கிராம அபிவிருத்தி சங்க  உறுப்பினர்கள் , உட்பட பலர் கலந்துகொண்டனர்.