(விளாவூர் நிருபர்)
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட சொறுவாமுனை கிராமத்தில் 18/06/2018 திங்கட்கிழமை இரவு
சொறுவாமுனை கூத்துக் கலைஞர்களால் புதிதாக பழகப்பட்ட "ஆரவல்லி,சூரவல்லி,வீரவல்லி" வடமோடி கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இந்த கூத்து அரங்கேற்றம் சொறுவாமுனை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய சடங்கு உற்சவத்தின் 1ம் நாள் இரவினை சிறப்பிக்கும் வண்ணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த கூத்தின் அண்ணாவியாராக மா.ஞானசெல்வம், சி.நிமலன் ஆகியோரும்.
கொப்பி ஆசிரியராக அ.கேதீஸ்வரன் அவர்களும் செயற்பட்டனர்.