நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவை அனுசரணையில் மாணவர்கள் கௌரவிப்பு




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய சடங்கு உற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவையின் அனுசரணையில் மட்/மமே/நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்று  புலமைப் பரீட்சை,
க.போ.த(சா/த) பரீட்சை,
க.போ.த(உ/த) பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றுதல் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவித்தினர்.

இந்த நிகழ்விற்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,
மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,
மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் த.ராமகிருஸ்ணன்,
நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை,
நாவற்காடு சமுகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.