கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம்


  
 (லியோன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில்  வரலாற்று சிறப்புமிக்க அம்மன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொத்துக்குளம்  ஸ்ரீ  முத்து மாரியம்மன் ஆலய  வருடாந்த மஹோற்சவத்தின்  தீர்த்தோற்சவம்  அடியார்கள் புடை சூழ கோலாகலமாக  நடைபெற்றது


மட்டக்களப்பு கொத்துக்குளம்  ஸ்ரீ  முத்து மாரியம்மன் ஆலய  வருடாந்த  மகோற்சவ பெருவிழா  கடந்த 19ஆம்  திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  ஆலய மஹோற்சவகாலங்களில் ஆலய  பிரதம  குரு சிவஸ்ரீ  நாராயண சன்முகநாதக் குருக்கள்  தலைமையில் தினமும் தம்ப பூஜை ,வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி, வெளி வீதியுலா நடைபெற்றது .

விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட தம்ப அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று  ஆலய மஹோற்சவத்தின்  தீர்த்தோற்சவம்  அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக ஆலய முன்றலில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெற்றது .

ஆலய  வருடாந்த மஹோற்சவத்தின் கொடியிறக்கம்  உற்சவகால கிரியைகளுடன் ஆலய மகோற்சவ பெருவிழா நிறைவு பெற்றது 









.