(லியோன்)
மட்டக்களப்பு
மறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருத்தலமான
புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின்
வருடாந்த திருவிழா மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை எ
.தேவதாசன் தலைமையில் கொடியேற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது
..
இடம்பெற்ற கொடியேற்ற நிகழ்வில் மட்டக்களப்பு
புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தல பங்கு தந்தை அருட்பணி நிக்சன் மற்றும்
அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , பங்கு மக்கள் கலந்துகொண்டனர்
ஆரம்பமான
திருத்தல திருவிழா எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை
காலை இடம்பெறவுள்ள கூட்டுத்திருப்பலியுடன்
நிறைவுபெறவுள்ளது
இந்த விசேட கூட்டுத் திருப்பலியினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்
பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் ஒப்புகொடுக்கப்பட்டவுள்ளது
திருத்தலத்தின்
திருவிழா நவநாள் காலங்களில் விசேட திருப்பலிகள் இடம்பெற்று எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை
புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் விசேட நற்கருணை வழிபாடுகளுடன் திருப்பலி
ஒப்புகொடுக்கப்படும்
கொடியேற்றத்துடன் ஆரம்பமான அந்தோனியார்
திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவின் முதல் நவநாள்
திருப்பலியினை “மனித வாழ்வும் மனித மான்புமே சமூக அக்கறையின் அடிப்படை” எனும் தலைப்பில் தாண்டவன்வெளி தூய காணிக்கை
அன்னை ஆலய பங்கு தந்தை ரமேஷ் கிறிஸ்டி
தலைமையில் பங்கு மக்கள் இணைந்து
ஒப்புகொடுக்கப்பட்டது