“கிராமத்துக்கு பொலிஸ் “ சேவையில் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

பொலிஸ்மா  அதிபரின்  சிந்தனைக்கு அமைவாக  சமூக  சேவைகள்  தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு   நாடளாவிய  ரீதியில் அணைத்து மாவட்டங்களில் உள்ள  பொலிஸ் பிரிவுகளில் ஒரு   மாதத்திற்கான  காவல் அரண்கள் அமைக்கப்பட்டு  விசேட     பொலிஸ் நடமாடும்   சேவைகள்  நடத்தப்பட்டன 
     

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் பிரிவுகளிலும் ஒரு   மாதத்திற்கான   காவல் அரண்கள் அமைக்கப்பட்டு பொலிஸ் நடமாடும்   சேவைகள் மேற்கொள்ளப்பட்டன  .

மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ்  பிரிவுக்குற்பட்ட  தாளங்குடா வேடர் குடியிருப்பு  பகுதியில் கிராமத்துக்கு பொலிஸ் “ எனும் தலைப்பின் கீழ் இடம்பெற்று வந்த  ஒரு   மாதத்திற்கான   பொலிஸ் நடமாடும்   சேவையின் இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது  .

பொதுமக்களும்  பொலிசாரும்  இடையில்  சிறந்த  நல்லுறவையும், இனங்களுக்கிடையில் சமூக நல்லிணக்கத்தையும்   ஏற்படுத்தும் வகையில்  முன்னெடுக்கப்பட்ட சமூக பணிகளின் கீழ் காத்தான்குடி கெயாஸ் அமைப்பின் அனுசரணையில்  தாளங்குடா வேடர் குடியிருப்பு கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது  

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராச்சி தலைமையில் தாளங்குடா வேடர் குடியிருப்பு குடும்ப நல உத்தியோகத்தர்களின் பணிமனை  மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு  மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி எல் ஆர் . குமாரசிறி , காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி டி . மகேஸ்வரன் ,காத்தான்குடி ஆதார  வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர்  எம் எம் எம் .அயாஸ்  ,காத்தான்குடி  கெயாஸ் அமைப்பின் செயலாளர் வைத்தியர் எம் எப் எம் .சில்மி , காத்தான்குடி அல்  அமின் வித்தியாலய அதிபர் . எம் டி . ஆதாம் லெப்பை ,காத்தான்குடி சிவில் அமைப்பின் பிரதிநிதி எம் எம் . காலிதீன் ஆஜியார் , தாளங்குடா வேடர் குடியிருப்பு கிராம சிவில் பாதுகாப்பு  குழு  தலைவர்  வி .கோபாலன்  ,காந்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.