(லியோன்)
பதுளை மாவட்டம் மையங்கனை
பொலிஸ் தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சிக் கல்லூரியின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பு
மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்
கட்டான பொலிஸ்
சேவைக்கால மற்றும் தமிழ் மொழி பாட நெறிக்கான பணிப்பாளர் எஸ் எஸ் பி .
செல்வராஜா வழிகாட்டலின் கீழ் பதுளை
மாவட்டம் மையங்கனை மற்றும் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் தமிழ் மொழி
டிப்ளோமா பயிற்சி நெறி கல்லூரியின் இணைப்பாளர் ஐ பி . பேரின்பராஜா
தலைமையில் மையங்கனை பொலிஸ் பயிற்சி நெறி கல்லூரியில்
தமிழ்மொழி டிப்ளோமா கற்கை நெறியினை நிறைவு செய்த பொலிஸ்
உத்தியோகத்தர்கள் கலாசார சுற்றுலா ஒன்றை மட்டக்களப்பு
மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளனர் .
மட்டக்களப்பு
தமிழர்களின் கலை , கலாசாரம் , பண்பாடு மற்றும் சமய வழிபாடுகள் போன்ற விடயங்களை கற்றுக்கொள்ளும் நோக்கில்
வருகைதந்துள்ளனர் .
இதன் ஒரு நிகழ்வாக
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயத்தை
மேற்கொண்டு , ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை வழிபாடுகளில்
கலந்துகொண்டனர் .
இந்த கலாசார சுற்றுலா
விஜயத்தில் தமிழ் மொழி பாடநெறி ஆசிரியர்களான
ஐ பி .கே சிவானந்தன் , எ என் .றோச், ஐ பி வாப்தீன் , எஸ் ஐ .
சுந்தரராஜன் எஸ் எ . ராஜேந்திரன் உட்பட 19 ஆசிரியர்களும் தமிழ் மொழி பயிற்சிக் கல்லூரி
400
பொலிஸ்
உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்