பதுளை மாவட்டம் மையங்கனை பொலிசார் மட்டக்களப்புக்கு விஜயம்


 (லியோன்)


பதுளை மாவட்டம் மையங்கனை  பொலிஸ் தமிழ் மொழி  டிப்ளோமா பயிற்சிக் கல்லூரியின்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை  மேற்கொண்டுள்ளனர்  


கட்டான பொலிஸ் சேவைக்கால மற்றும் தமிழ் மொழி பாட  நெறிக்கான பணிப்பாளர் எஸ் எஸ் பி . செல்வராஜா வழிகாட்டலின் கீழ்  பதுளை மாவட்டம் மையங்கனை மற்றும் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் தமிழ் மொழி  டிப்ளோமா பயிற்சி நெறி  கல்லூரியின் இணைப்பாளர் ஐ பி . பேரின்பராஜா தலைமையில்  மையங்கனை பொலிஸ் பயிற்சி நெறி  கல்லூரியில்  தமிழ்மொழி டிப்ளோமா  கற்கை நெறியினை நிறைவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலாசார சுற்றுலா ஒன்றை  மட்டக்களப்பு மாவட்டத்தில்  மேற்கொண்டுள்ளனர் .

மட்டக்களப்பு தமிழர்களின் கலை , கலாசாரம் , பண்பாடு மற்றும் சமய வழிபாடுகள்  போன்ற விடயங்களை கற்றுக்கொள்ளும் நோக்கில் வருகைதந்துள்ளனர் .

இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ  மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு , ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டனர்  .

இந்த கலாசார சுற்றுலா விஜயத்தில் தமிழ் மொழி பாடநெறி ஆசிரியர்களான  ஐ பி .கே சிவானந்தன் , எ என் .றோச், ஐ பி வாப்தீன் , எஸ் ஐ . சுந்தரராஜன்  எஸ் எ . ராஜேந்திரன் உட்பட    19  ஆசிரியர்களும் தமிழ் மொழி  பயிற்சிக் கல்லூரி   400   பொலிஸ் உத்தியோகத்தர்களும்  கலந்துகொண்டனர்