(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று
சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு திருப்பெருந்துறை கொத்துக்குளம் ஸ்ரீ
முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு அடியார்கள்
புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது .
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நாராயண சன்முகநாதக் குருக்கள்
தலைமையில் விநாயர்
வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாக, ஹோமம் பூசைகள் நடைபெற்று ,தொடர்ந்து விசேட அபிசேகம் பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு
அபிசேகம் செய்யப்பட்டது.
.
இதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று ஆலய
மஹோற்சவ கொடியேற்ற நிகழ்வு அடியார்கள் புடை சூழ
வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது .
இதனை
தொடர்ந்து அம்பாளுக்கு அபிசேம், தீபாராதனைகள் நடைபெற்று
அலங்கரிக்கப்பட்ட அம்பாளின் ரதம் உள்வீதி வலம்வருதல் சிறப்பாக
நடைபெற்றது
நடைபெற்ற ஆலய மஹோற்சவ
கொடியேற்ற நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர் .