பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(படுவான் எஸ்.நவா)
மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்திலுள்ள 16 பாடசாலைகளை சேர்ந்த 400 மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் கற்றல் உபகரணங்கள் பாடசாலை சீருடைகள் என்பன கிழக்கின் இளைஞர் முன்னனியின் தலைவர் கணேசமூர்த்தி-கோபிநாத் அவர்களின் தலைமையில் மட்ஃபட் கோவில்போரதிவு விவேகானந்தா பாடசாலையில் மண்டபத்தில் (22)நடைபெற்றது.


இந் நிகழ்வின் போது பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடுகள் நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனேகணேசன் பிரதியமைச்சர் அலிஸாஹி மௌலானா பாரளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி திணக்கள தலைவர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்