(லியோன்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவின் சிறுவர் மாற்றம் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும்
பெற்றோர்களுக்கான சட்ட ஒழுங்கு விதி முறைகள் தொடர்பான கருத்தரங்கு மட்டக்களப்பு
புதூர் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியால அதிபர் கே .பாஸ்கரன்
தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றம்
பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி என் .சுசிலாதேவி கலந்துகொண்டார் i
இதன் போது மாணவர்களின் கல்வி ,கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தல்
மற்றும் மாணவர்களின் தவறுகளுக்கான தண்டனை சட்ட ஒழுங்கு விதி முறைகள் தொடர்பான விடயங்கள்
மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியால மாணவர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும்
விளக்கமளிக்கப்பட்டது
இந்த கருத்தரங்கு நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் திருமதி எ.சுரேந்திரன்
பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு
உறுப்பினர் ,பெற்றோர்கள் , கிராம அபிவிருத்தி குழு
உறுப்பினர்கள் என பலர் , கலந்துகொண்டனர்