விவசாய திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பாடசாலைத் தோட்டம் கையளிக்கும் நிகழ்வு


(லியோன்)

விவசாய திணைக்களத்தின் மத்திய வலய கல்லடி விவசாய போதனாசிரியர் பிரிவின்  விவசாய திணைக்களத்தினால் மட்டக்களப்பு இந்து கல்லூரியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாடசாலை தோட்டத்தினை கையளிக்கும் நிகழ்வும் மற்றும் கண்காட்சியும்  கல்லூரி அதிபர்  எஸ். டி .முரளிதரன் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது


கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை தோட்டத்தினை மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்  கே .பாஸ்கரன் திறந்து வைத்து பார்வையிட்டதுடன் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளையும்  நாட்டி வைத்தார்  .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்  கே .பாஸ்கரன் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே .அருள்பிரகாசம் ,,மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம் பரமேஸ்வரன் , மட்டக்களப்பு மத்தி வலய உதவி  விவசாய பணிப்பாளர்  எம் எஸ் எம் சலீம் , மட்டக்களப்பு வலயம் ஐ எஸ் எ ,சேவைக்கால ஆலோசகர் பி செல்வநாயகம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர் .