வாகரையில் 30வது பிரதேச இளைஞர் விளையாட்டு பரிசளிப்பு நிகழ்வுகள்.

 
30வது தேசிய இளைஞர் விளையாட்டு,  வாகரை பிரதேச இளைஞர் விளையாட்டுபோட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வுகள் 17.05.2018 (வியாழக்கிழமை) பிரதேச இளைஞர் சேவை  அதிகாரி  எம்.  இர்ஷாத்அலி  ஒழுங்கமைப்பில் வாகரை பிரதேச இளைஞர் கழங்களின் சம்மேளன தலைவர் திரு பி.அனுராஜ் தலைமையில் நடைபெற்றது.

வாகரை பிரதேச பதிவு செய்யப்பட்ட இளைஞர்கழகங்களின் இளைஞர் யுவதிகளிடையே நடைபெற்ற குழு மற்றும் தனி போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் கண்காட்சி போட்டிகளும் வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இவ் பரிசளிப்பு நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் திரு எஸ்.கோணலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் திரு ரி.சத்தியநாதன், வாகரை பிரதேச உதவி பிரதேச செயலாளர் திருமதி கே.கமலினி, மட்டக்களப்பு மாவட்ட, மாவட்ட  இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி நிசாந்தி அருள்மொழி, திருமதி ஜேசுதாசன் கலாராணி, ஏறாவூர் பற்று இளைஞர் சேவை அதிகாரி ஹனிபா கே.தமிழ்ச்செல்வன் முன்னால் இளைஞர்பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.