சின்ன உப்போடை சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா

 (லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு  சின்ன உப்போடை தூய சூசையப்பர் ஆலய  வருடாந்த  திருவிழா  திருப்பலி  மட்டக்களப்பு  மறை  மாவட்ட  ஆயர்   ஜோசப் பொன்னையா ஆண்டகை    தலைமையில்  ஆலய பங்கு தந்தை லோரன்ஸ் , அருட்தந்தை  போல்சற்குண நாயகம் , அருட்தந்தை  நவாஜி, அருட்தந்தை  ரோசன் ,அருட்தந்தை   ஜோசெப் மேரி   ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .


ஆலய வருடாந்த  திருவிழா கடந்த  27.04.2018  வெள்ளிக்கிழமை மாலை பங்கு தந்தை தலைமையில் கொடியேற்றபட்டு திருவிழா  ஆரம்பமானது.

தொடர்ந்து நவநாட்காலங்களில் தினமும் மாலை திருசெபமாலையும்  திருப்பலியும்  இடம்பெற்று  நேற்று  மாலை  புனிதரின் திருச்சுருப பவனியும்  தொடர்ந்து விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது
(30) திங்கள்கிழமை   காலை  மட்டக்களப்பு மறை  மாவட்ட  ஆயர்  ஜோசப்  பொன்னையா  ஆண்டகையினால் திருவிழா கூட்டுத்திருப்பலி  ஒப்புகொடுக்கப்பட்டது .

இடம்பெற்ற திருவிழா திருப்பலியில்   38 வருடங்கள் ஆன்மீக பணிவாழ்வை நிறைவு செய்த மறை  மாவட்ட  ஆயர்  ஜோசப்  பொன்னையா  ஆண்டகையையும் ,50 வருடங்கள் ஆன்மீக பணிவாழ்வை நிறைவு செய்த இயேசு சபை துறவி ஜோசெப் மேரி அடிகளாரையும் வாழ்த்தி பொன்னாடை போர்த்தி நினைவு சின்னங்கள் வழங்கி பங்கு மக்களால் கௌரவிக்கப்பட்டனர்

இதனை தொடர்ந்து  ஆலய கொடியிறக்கப்பட்டு ஆலய வருடாந்த திருவிழா நிறைவு  பெற்றது