(சசி துறையூர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 30வது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் வரிசையில் மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் ஆண்களுக்கான குழு நிலை வலைப்பந்து போட்டியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அணி முதலாவது இடத்தினை பெற்றுக்கொண்டது.
போட்டி மாமாங்கம் ஜங்ஸ்ரார் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (26) நடைபெற்றது.
பெண்களுக்கான போட்டியில் கிரான் பிரதேச அணி முதலாவது இடத்தினையும், கோறளைப் பற்று பிரதேச அணி இரண்டாவது இடத்தினையும் தட்டிக்கொண்டது.