மட்டக்களப்பு மாவட்ட கபடி போட்டியில் மண்முனை வடக்கு அணி சம்பியன்

(சசி துறையூர்) 


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 30வது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் வரிசையில் மட்டக்களப்பு மாவட்ட  குழு நிலை போட்டிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில்  கபடி கயிறுழுத்தல் (ஆண் பெண்) இருபாலாருக்குமான போட்டிகள் மாமாங்கம் ஜங்ஸ்ரார் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (26)   நடைபெற்றது.

ஆண்களுக்கான கபடி மற்றும் கயிறுழுத்தல் போட்டிகளில் மண்முனை வடக்கு அணி முதலிடத்தினை பெற, இரண்டாவது இடத்தினை மண்முனை மேற்கு கன்னன்குடா கண்ணகி இளைஞர்கழகம் தட்டிக்கொண்டது.













பெண்களுக்கான கபடி போட்டியில் கிரான் அணி முதலாவது இடத்தினையும், ஏறாவூர் பற்று அணி இடத்தினையும் தட்டிக்கொண்டது.






பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் சம்பியனாக ஏறாவூர் பற்று அணியும், இரண்டாவது இடத்தினை மண்முனை வடக்கு அணியும் பெற்றுக்கொண்டது.