தேசிய உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு ஏரோபிக் “உடல் அப்பியாச நிகழ்வு


 (லியோன்)

தேசிய உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து அரச திணைக்களங்களில் உத்தியோகத்தர்களுக்கான “ ஏரோபிக் “உடல் அப்பியாச செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .


இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய உடல் ஆரோக்கிய  வாரத்தை முன்னிட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான  ஏரோபிக் “உடல் அப்பியாச செயல்பாடுகள் இன்று இடம்பெற்றன

மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த ஏரோபிக் “உடல் அப்பியாச செயல்பாட்டு நிகழ்வில்  விளையாட்டு திணைக்கள மாவட்ட இணைப்பாளர் எம் .ஆதாம் லெப்பை ,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் , டி .பிரசாத்  ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக கலந்துகொண்டனர் .

இந்த ஏரோபிக் “உடல் அப்பியாச செயல்பாட்டில் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் .