(லியோன்)
இலங்கை கரித்தாஸ்- செடெக் நிறுவனத்தின் 50 வது
ஆண்டு நிறைவினை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில்
சமாதானத்தையும் மற்றும்
நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும்
நோக்குடன் இந்த விவாத போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன .
12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக மறை மாவட்டங்களிலுள்ள சமூகப் பணி நிறுவனங்களின்
ஒழுங்கமைப்பில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இந்த விவாத போட்டிகள் நடைபெற்று
வருகின்றன ,
இதன் கீழ் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின்
ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு
,அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட கல்வி
வலயங்களான ,மட்டக்களப்பு , ஏறாவூர் மத்தி
, பட்டிருப்பு , மட்டக்களப்பு மேற்கு , கல்குடா , கல்முனை , ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட
பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விவாத போட்டிகள் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து
மகளிர் கல்லூரியில் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குனர்
அருட்தந்தை எலக்ஸ் ரொபட் தலைமையில் நடைபெற்றது .
இன்று நடத்தப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விவாத
போட்டிகளில் முதலாம் ,இரண்டாம் இடங்களை பெறுகின்ற பாடசாலைகள் ஜுலை மாதம் கொழும்பில் தேசிய ரீதியில்
நடைபெறுகின்ற விவாத போட்டிகளில் பங்கு கொள்ளவுள்ளன ,
இன்று நடத்தப்பட்ட விவாத போட்டி நிகழ்வுக்கு நடுவர்களாக சட்டத்தரணிகள் , மனித உரிமை ஆணைக்குழு
பிரதிநிதிகள் , அரச திணைக்கள அதிகாரிகள் , அருட்தந்தையர்கள் ,பாடசாலை அதிபர்கள்
,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்