புதிய அமைச்சர்கள் மாமாங்கேஸ்வரர் ஆலய பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டனர்


(லியோன்)

புதிய அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் (02) நேற்று மாலை இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டனர்
.

அமைச்சரவையின்  மாற்றத்தின் பின் புதிய அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களான  நிமல் சிறிபால சில்வா ,துமிந்த திசாநாயக , மகிந்த அமரவீர ஆகியோர்  முதல் விஜயத்தினை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொண்டதுடன் கிழக்குமாகாண முதலமைச்சின் செயலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளம் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டனர்

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தற்கு வருகை தந்த கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம , அமைச்சர்களான  நிமல் சிறிபால சில்வா ,துமிந்த திசாநாயக , மகிந்த அமரவீர  ஆகியோரை  மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர்கள்  மற்றும் ஆலய நிர்வாக சபையினரால் வரவேக்கப்பட்டனர்

இதனை தொடர்ந்து இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ,ஆலய புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டனர்

இதன் போது கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே . கருணாகரன் ,  மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் , ஆலய வண்ணக்கர்மார்கள் , ஆலய நிர்வாக  சபை உறுப்பினர்கள் ,  என பலர் கலந்துகொண்டனர்