தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்


(லியோன்)

கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்  18 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை மாலை  திருக்கதவு  திறத்தல்  உற்சவத்துடன்  பெருவிழா ஆரம்பமாகி 
எதிர்வரும்  29.05.2018 ஆம் திகதி  செவ்வாய்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி ஆலய வருடாந்த உற்சவம் நிறைவுபெறவுள்ளது


ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் மாலை அபிஷேக அலங்கார பூசைகள்  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிதம்பர சாந்தரூபக் குருக்கள் தலைமையில்  நடைபெறும் .

ஆலய உற்சவத்தின் 5தாம் நாள் சடங்கு  22.05.2018  செவ்வாய்கிழமை மாலை கல்யாணக் கால் வெட்டும் சடங்கு இடம்பெற்று  வழமையான வீதியூடாக அம்பாள் ஊர்காவல் பண்ணும் நிகழ்வும் இடம்பெறும் .

27.05.2018 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை தீ மிதிப்பு வைபவம் நடைபெற்று   29.05.2018 ஆம் திகதி  செவ்வாய்கிழமை   அதிகாலை திருக்குளிர்த்தி பாடி அம்பாளின்  வருடாந்த உற்சவம் இனிதே நிறைவுபெறும்