செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய பாற்குட பவனியும் 1008 சங்காபிசேகமும்

செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் இடம் பெற்று அதனை தொடர்ந்து மண்டலாபிஷேகம் இடம் பெற்றுவந்ததை தொடர்ந்து இறுதி நாளாகிய இன்று செவ்வாய்கிழமை(15.05.2018) அம்பாளிற்கு பாலாபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேகம் என்பன இடம் பெற்றன. அந்த வகையில் இன்று காலை செட்டிபாளையம் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பால் குடபவனி ஆரம்பமாகி பிரதான வீதியுடான ஆலயத்தை வந்தடைந்து. 


அதனைத் தொடர்ந்து விசேட  யாக  பூஜையும் 1008 சங்காபிஷேக விசேட பூஜை நடைபெற்று தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய    அம்மனுக்கு  அபிசேகம் செய்யப்பட்டது.இந்த  பெருவிழாவில்  பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.